தமிழில் "பூ', "மரியான்' உள்பட சில படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் ஓரிரு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், எந்த கேள்விக்கும் தயங்காமல் பதில் சொல்லக் கூடியவர். அது போல் சமூகம் சார்ந்த தனது கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிப்பார். இவர் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். "விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது.
ஏற்கெனவே பல நடிகைகள் படம் இயக்கி வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவும். என்ன கதை என்பது பற்றி இப்போது சொல்ல மாட்டேன். நான் படம் இயக்க வருவது, ஓர் இயக்குநராக என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. திரையில் இதுவரை சொல்லப்படாத கோணத்தில், மிகவும் நேர்மையாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுதான் இயக்குநராக மாறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் பார்வதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் மாதவிடாய்..! மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



