எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்று

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :13 அக்டோபர் 2019, 12:14 pm

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு ஆப்பிரிக்காவில், அதிகமான மக்கள் வசிக்கும் நாடு எத்தியோப்பியா. சுற்றுச்சுழல் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் இங்கு 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு மிகவும் குறைந்தது. விளைவு அந்த நாட்டில் கடும் வறட்சி நிலவ ஆரம்பித்தது. இத்தனைக்கும் இங்கே 80 சதவிகித மக்களுக்கு விவசாயம் தான் பிரதான வேலை. இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது எத்தியோப்பியாவின் நில அமைப்பு.

போதுமான மழை இல்லாததால் மண் அரிப்பு, மண் வளம் குன்றிப்போதல், காடுகள் அழிவு மற்றும் வறட்சி ஆகியவை வழக்கமாகிவிட்டன. வறட்சியை போக்குவதற்கான வழி என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது எத்தியோப்பிய அரசு. 

மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே வறட்சியை தீர்க்க முடியும் என்று நம்பினார்கள். தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே. மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!  என அந்த நாடு பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. மேலும் 400 கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக முயற்சியில் இறங்கினார் பிரதமர் அபிய் அகமது. அதன்படி, "பசுமை மரபு' என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் திட்டம் ஒன்றை அந்த நாடு அறிமுகப்படுத்தியது. நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும் இதில் பங்கேற்க வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மரம் நடும் நிகழ்ச்சி  தொடங்கப்பட்டதும் முதல் ஆறு மணி நேரத்திலேயே 15 கோடி மரங்கள் நடப்பட்டன. ட்விட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு இதனைத் தெரிவித்த அஹமத், நம்முடைய இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என மக்களை மேலும் உற்சாகப்படுத்த எண்ணிக்கை அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் இரட்டிப்பிற்கும் அதிகமானது. அதாவது 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.

இந்தியா கடந்த 2017-ஆம் ஆண்டு, 12 மணி நேரத்தில் 6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது, அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.