ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மழைக்கால தொற்று: தேவை முன்னெச்சரிக்கை!

""மழைக்காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்; முக்கியமாக, காது சார்ந்த நீர்த் தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது''  

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

பாரத்

""மழைக்காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்; முக்கியமாக, காது சார்ந்த நீர்த் தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் சென்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.சுந்தரி.

மழைக்காலம் நெருங்கிவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர் சொல்கிறார்:

""பருவ மழையுடன் சேர்ந்து பல தொற்றுகள் வருகின்றன. திடீர் ஈரப்பத அதிகரிப்பால் பாக்டீரியா, பூஞ்சை வாழக்கூடிய நிலை அதிகரித்து, அவை பெருகுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் உள் காது, நடுத்தர காது, வெளிப்புற காது உட்பட காதின் பல்வேறு பகுதிகளில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. மழைக்கால காது நோய்த்தொற்றுகளின்போது தென்படும் சில பொதுவான அறிகுறிகள் காது அரிப்பு, காது அடைப்பு, காதில் திரவ வெளியேற்றம், காது வலி.

காரணிகள்

காதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, தொண்டையால் ஏற்படும் தொற்றாகும். தொண்டையில் தொற்றை உண்டாக்கும் பாக்டீரியா காதுக்கும் வேகமாகப் பரவும். யூஸ்டாசியன் குழாய் மூலம் பாக்டீரியா தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. இந்த குழாய் தொண்டையிலிருந்து காதை இணைக்கிறது.

காதில் நோய்த் தொற்றுகள் வெளிப்புறக் காரணங்களாலும் ஏற்படலாம். ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஆடைகள், சுற்றுப்புறங்களில் பூஞ்சை வளரும். அது விரல்களில் இருந்து காதுக்குப் பரவுகிறது. காதுகளில் காது மெழுகு அல்லது இறந்த தோல் இருக்கும்போது பூஞ்சை, பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கிறது.

பாக்டீரிய காது நோய்த்தொற்று

காது நோய்த் தொற்றுகளில் பாக்டீரிய தொற்றுகளும் ஒன்று. குறிப்பாக, மழைக்காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். முக்கியமாக காது கால்வாய் (பின்னா), நடுக் காது ஆகியவற்றை தொற்று பாதிக்கிறது. பெரும்பாலும் காது வலி, காதில் அசெளகரியம், அடைப்பு உணர்வு, சீழ் அல்லது காதில் இருந்து அசாதாரண திரவ வெளியேற்றம், தற்காலிக காது கேளாமை போன்றவை பாக்டீரிய காது நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய அறிகுறிகள்.

பூஞ்சை காதுத் தொற்று

ஒருவரது காதில் தண்ணீர் சென்றால், அவர் ஆரோக்கியமாக இருந்தாலும்கூட, அவருக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு சாத்தியம் இருக்கிறது. காதுகளுக்குள் இருக்கும் ஈரப்பதம் பூஞ்சை இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது. காதுகளில் வீக்கம், அரிப்பு, வெளிப்புற காது சிவந்துபோதல், கடுமையான தலைவலி, காதில் வலி, வறட்டுத்தன்மை அல்லது காதில் தோல் உரிதல் ஆகியவை பூஞ்சை காது நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் காது நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில பயனுள்ள வழிகள்:

குளித்த பிறகு, சுத்தமான துணியால் துடைப்பதன் மூலம் சரியான காது சுகாதாரத்தை பராமரித்தல். பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இயர்போன்களை சுத்தமாக வைத்திருத்தல். காது மெழுகு சுத்தம் செய்ய காதுக்குள் கூர்மையான பொருட்களை செலுத்துவதை தவிர்த்தல். தீவிர வலி அல்லது அசெளகரியத்தை அனுபவிக்கும்போது, தாமதமின்றி மருத்துவ நிபுணர்களை அணுகுதல்.

முடிவாக, காது சுகாதாரம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். அது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, ஒரு மருத்துவ நிபுணரை அணுகி அடிப்படை முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகளைப் பெற்றுக்கொள்வது முக்கியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.