'புஹாரி ஜங்ஷன் யூ டியூப் சேனல்' சந்தாதாரர்களும், 'அன்பு சூழ் உலகு' அறக்கட்டளையினரும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்தான் 'அன்பு சூழ் 5 ரூபாய் கேன்டீன்'.
மதுரையில் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்துச் செல்லும் தூரத்தில் சாலையோரம் கேன்டீன் செயல்படுகிறது. இங்கு ஜூலை 1-இல் இருந்து மதியம் மட்டும் உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மதிய உணவில் பொன்னி அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொறியல் அடங்கும். உழைக்கும் மக்களுக்கு தரமான உணவை குறைந்தக் கட்டணத்தில் வழங்கும் ஒரு சமூக முயற்சி இது.
இதுகுறித்து கேன்டீன் நிர்வாகிகள் கூறியது:
'மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கேன்டீன் செயல்படும். மதிய உணவுக்கு டோக்கன் வழங்குவது காலை 11.30 மணி முதல் தொடங்கும். ஒருவருக்கு ஒரு டோக்கன் மட்டும்தான். அமர்ந்து உணவருந்த இட வசதி இல்லாததால், தற்போதைக்கு உணவு பார்சலில் மட்டுமே வழங்கப்படும்.
கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்காக, திருமங்கலம் வர வேண்டி உள்ளது. அப்படி வருபவர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த உணவகத்தைத் தொடங்கியுள்ளோம்' என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 21 மாலை 6 மணி முதல் பிரசாரம் கூடாது! வேறு என்னென்ன விதிகள்? - தேர்தல் ஆணையம்
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

திருக்கடையூர் ரகசியம்

மோகன்லால் - மம்மூட்டி கூட்டணியின் பேட்ரியாட்! முதல் பாடல் வெளியீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

