ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மோகன்லால் - மம்மூட்டி கூட்டணியின் பேட்ரியாட்! முதல் பாடல் வெளியீடு!

பேட்ரியாட் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

Patriot movie song released

மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடிக்கும் பேட்ரியாட் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது... - Instagram

Published On :12 மார்ச் 2026, 6:00 pm IST

நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் “பேட்ரியாட்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் “பேட்ரியாட்”. பிரபல இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில், நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள “பேட்ரியாட்” திரைப்படத்தின் ”காட்டுத் தோட்டப்போல்” எனும் முதல் பாடல் வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் வரும் ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

The first song of the film “Patriot”, starring actors Mammootty and Mohanlal, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.