வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாலிவுட்டை கலக்கும் இசை

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள 'சையாரா' படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2025, 3:04 pm

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள 'சையாரா' படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது. 'சையாரா' டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நெüடியல் பாடிய இரண்டாவது பாடல் பர்பாத் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான 'தும் ஹோ தோ' என்கிற காதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலை இன்று இந்தியாவின் மிகவும் பேசப்படும் இளம் பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, நாடு முழுவதும் போற்றும் ஏராளமான மெகா ஹிட் பாடல்களை வழங்கிய மோஹித் கூறுகையில், ''விஷால் 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்ததிலிருந்து, நானும் அவரும் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். சரியான தருணத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.

அது 'சையாரா' படத்தில் நிகழ்ந்தது. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி நாட்களில் அவர் மனவேதனையில் இருந்தபோது, எனது இசை அவரை கவர்ந்தது. உங்கள் படைப்புகள் ஒருவரின் மீது இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் கேட்கும் போது, அது ஒரு மிகப்பெரிய உணர்வு.

இசை மக்களின் இதயங்களைத் தொடும் திறன் கொண்டது என்றும், அது மிகவும் தூய்மையான ஊடகம் என்றும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எனவே எனது 20 ஆண்டுகால இசை இயக்கம் மற்றும் உருவாக்கத்தில், எனது பாடல்கள் மூலம் மக்களுக்கு நினைவுகளை உருவாக்கியதற்கு நான் நன்றி உள்ளவனாக உணர்கிறேன். விஷால் மிஸ்ரா எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் திறமையான கலைஞர்களில் ஒருவர், அவருடன் பயணிப்பது ஒரு பாக்கியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.