அமெரிக்காவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த இருபத்து இரண்டு வயது கிருஷ்ணா ஜெயசங்கர் நிவேதா சாதனையைப் படைத்துள்ளார்.
நியூ மெக்ஸிகோ அப்புக்யூர்க்யூவில் அண்மையில் நடைபெற்ற தேசிய உள்ளரங்கு குண்டு எறிதல் போட்டியில், 16.03 மீட்டர் தூரம் தூக்கி எறிந்து ஒரு சாதனையை செய்தார். இதன் மூலம் அவர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒரு இந்திய பெண் குண்டு எறிதலில் செய்துள்ள புதிய சாதனையாகும்.
ஏற்கெனவே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூர்ணிமா ராவ் 2023-இல் 15.54 மீ. எறிந்து சாதனையைப் புரிந்திருந்தார். அதனை தற்போது கிருஷ்ணா ஜெய்சங்கர் முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மியா லென்சர் 19.02 மீட்டர் தூரம் தூக்கி எறிந்து பெற்றார். வெள்ளிப் பதக்கத்தை கேபி மோர்ன்ஸ் 17.09மீட்டர் எறிந்து பெற்றார்.
கிருஷ்ணாவின் பெற்றோர் ஜெயசங்கர் மேனன், பிரசன்னா ஆகியோர் முன்னால் சர்வதேச கூடைப் பந்து வீரர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்கேட்டிங்கில் சிறுமி சாதனை: முதல்வா் ரங்கசாமி பாராட்டு

தடை தாண்டுதல்: இறுதிப் போட்டியில் பதக்கத்தை இழந்த இந்திய வீராங்கனை!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. பயணம்! குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் மாருதி!

பெருக்கல் வாய்ப்பாடு : சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


