ஜெர்மனி பிறந்த வீடு; தமிழகம் புகுந்த வீடு

ஜெர்மனி நாட்டில் பிறந்தாலும் தமிழ் மீதும், தமிழ்நாட்டின் கிராம கலாசாரத்தின் மீதும் ஏற்பட்ட காதலால் தமிழ்நாட்டையே புகுந்த வீடாக மாற்றிக் கொண்டவர் உல்க் நிக்லாஸ். மதுரை மாநகன் மருமகளாக மாறிய இவர், ஜெர்ம
ஜெர்மனி பிறந்த வீடு; தமிழகம் புகுந்த வீடு
Updated on
2 min read

ஜெர்மனி நாட்டில் பிறந்தாலும் தமிழ் மீதும், தமிழ்நாட்டின் கிராம கலாசாரத்தின் மீதும் ஏற்பட்ட காதலால் தமிழ்நாட்டையே புகுந்த வீடாக மாற்றிக் கொண்டவர் உல்க் நிக்லாஸ்.

மதுரை மாநகன் மருமகளாக மாறிய இவர், ஜெர்மனி நாட்டின் குலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஜெர்மன், ஆங்கிலம், கம்போடியா, ந்தி ஆகிய மொழிகளைக் கற்றவர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த அவர், வெள்ளிக்கிழமை மாநாடு ஆய்வரங்க நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக கவனமுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவடம் நாம் பேசியதில் இருந்து...

உங்களுக்கு தமிழ் மீது ஆர்வம் எப்படி வந்தது?

1973-ம் ஆண்டு இந்திய கலாசாரம் பற்றிப் படிக்க எண்ணினேன். அப்போது ந்தி படிப்பதற்காக குலோன் பல்கலைக்கழகப் பேராசியர் யானர்டு என்பவரை அணுகியபோது தமிழ் தெயாமல் இந்திய கலாசாரத்தை முழுமையாக அறிய முடியாது. எனவே தமிழ் படியுங்கள் என ஆர்வமுட்டினார். அதன்பிறகு தமிழ் கற்க தொடங்கி 1981-ல் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றேன். பின்னர் தமிழ்நாட்டுக்கு முதல்முறையாக அதே ஆண்டில் வந்தேன். அப்போது இங்குள்ள கலாசாரம், பண்பாடு எனக்கு ரொம்பப் பிடித்தது. தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினேன்.

உங்களது முனைவர் பட்ட ஆய்வு எதைப்பற்றியது?

முத்தொள்ளாயிரம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். இதற்காக 1984 முதல் 1986 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், 1986 முதல் 1990 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வுக்காகத் தங்கியிருந்தேன்.

குலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை பற்றி

கூறுங்கள் பழமையான குலோன் பல்கலைக்கழத்தில் தமிழ்த் துறை துவக்கப்பட்ட 1979-ம் ஆண்டு காலகட்டத்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஜெர்மனியில் இளைஞர்களிடம் தமிழ் ஆர்வம் எப்படி உள்ளது?

1983-ம் ஆண்டு முதல் இலங்கை அகதிகள், ஜெர்மனிக்கு அதிகமாக வருகின்றனர். அவர்களுடன் பேசி, பழக ஜெர்மனி குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் தமிழின் அருமையை உணரத் துவங்கியுள்ளனர். இதனால், ஜெர்மனி இளைஞர்களிடம் தமிழ் கலாசாரம் அதிகத்து வருகிறது.

அங்கு உயர்கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளன?

ஜெர்மனிக்கு வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் 2-வது தலைமுறையினர் இப்போது தமிழில் உயர்கல்வி, பொறியியல் படிக்க அவர்களுக்கு உய வாய்ப்புக் கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசு எங்கள் பல்கலைக்கழகம் போல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ்த் துறைகளுக்கு நிதி உதவி செய்தால் அங்குள்ள தமிழர்கள் தாய்மொழியில் படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.

நீங்கள் சென்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு எப்படி இருக்கிறது?

பிரான்ஸ், கம்போடியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். சிங்கப்பூல் வசிக்கும் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு என்னைக் கவர்ந்தது. பிரான்ஸிலும் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர்.

அண்மையில் நீங்கள் சென்ற நாடு எது?

சில மாதங்களுக்கு முன்பு கம்போடியா சென்றேன். அங்கு தமிழ்நாட்டின் சோழர் காலச் கலாசாரம் போல அங்கோர் என்னும் கலாசாரம் உள்ளது. இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. 13-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர் ஒருவர், அங்கிருந்த அங்கோர் மன்னருக்கு பெய கல் ஒன்றைப் பசாக வழங்கியுள்ளார். அது அங்குள்ள சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களும் அங்கு உள்ளன. தமிழர், கம்போடியர் கலாசாரங்களுக்கு இடையே அதிக ஒற்றுமைகள் உள்ளன. இங்கு வெளிவரும் திரைப்படங்களின் சி.டி.க்கள் அங்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. அங்குள்ள மக்கள் தமிழ் சினிமாவை மிகவும் ரசிக்கின்றனர்.

உங்களது கணவர் பற்றி சொல்லுங்கள்

அவர் பெயர் சரவணன். புகைப்படக் கலைஞர். அவரைக் கைப்பிடித்தது சுவாரசியமான கதை. ஆய்வுக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தபோது கிராமங்களுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது சரவணனின் தந்தை கிராம கலாசாரம், பண்பாடு குறித்து நிறையத் தகவல்களை கூறுவார். அப்போது சரவணனைப் பார்த்து, பழகி, காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

தமிழகத்தில் பிடித்த விஷயம்?

கிராம கலாசாரம் ரொம்பப் பிடிக்கும். கிராமியப் பாடல்கள், பஜனை, வில்லுப்பாட்டு ஆகியவை என்னைச் சொக்கவைப்பவை. புகுந்த வீடான தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறேன். பல்கலைக்கழக பணி போக ஓய்வுநேரத்தில் புதுவையில் ஒரு கிராமத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் இருந்து கிராம கலாசாரத்தை ரசித்து வருகிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி..

எங்களுக்கு குழந்தைகள் இல்லை. 5 பேரை தத்தெடுத்து வளர்த்தோம். அவர்களுக்குத் திருமணமாகி 5 பேரக் குழந்தைகள் உள்ளனர் என்றார் புன்னகையுடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com