நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கவிராயர்கள்

இவர் முகவூர் கந்தசாமிக் கவிராயருடைய மகன். சேற்றூர் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். வண்டு விடு தூது, முருகர் அநுபூதி, திருப்பரங்குன்றம், குதிரைமலை பதிகங்கள் முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2013, 2:57 am IST

இவர் முகவூர் கந்தசாமிக் கவிராயருடைய மகன். சேற்றூர் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். வண்டு விடு தூது, முருகர் அநுபூதி, திருப்பரங்குன்றம், குதிரைமலை பதிகங்கள் முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இயற்பெயர் சடையன். இவர் முன்னோர்கள் திருக்கோயில் புலவர்களாக விளங்கியதால், "திருக்குருகைப் பெருமாள் கவிராயர்' என்ற பெயரே இவர் வழிவந்தோர்க்கு வழங்கப்பட்டு, இயற்பெயர் மறைந்துவிடும். இவரும் தன் தந்தையாருக்குப் பிறகு கோயில் புலவராக இருந்தவர். மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தும், பழந்தமிழ் நூல்களைத் தேடிச் சேகரித்து, பாதுகாத்தும் வந்தவர். ஆதிநாதபட்டரின் வேண்டுகோளுக்கு இணங்க வடமொழியில் இருந்த குருகூர் மான்மியத்தை தமிழில் "திருக்குருகூர் மான்மியம்' என்ற பெயரில் கி.பி.1548-இல் இயற்றியுள்ளார். மேலும், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன் கிளவிமாலை, மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

பன்னிருகைப்பெருமாள் கவிராயர்

இவர் பத்தைபண்டிதன் குறிச்சி என்னும் ஊரைச் சேர்ந்தவர். குலசேகரநாதக் கவிராயரின் மகன். திருச்செந்தூர் "கந்தர் அற்புதமாலை' எனும் நூலை (மூன்று பாகங்கள்) இயற்றியுள்ளார்.

அ. குழந்தைக் கவிராயர்

இவர் குன்றக்குடியில் பிறந்தவர். குன்றக்குடி முருகன் மீது தினம் ஒரு பாடல் பாடி, "தினகவிதை' என ஒரு நூலை இயற்றியுள்ளார்.

குமார கவிராயர்

இவர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். சண்முகக் கவிராயரின் மகன். இவரைக் குமாரகவிகள் என்றும் அழைப்பர். குமரகுருபர சுவாமியின் உடன்பிறந்த சகோதரர் இவர். குமரருபரரின் பாடல்களை ஏட்டில் எழுதும் பணியை இவரே புரிந்து வந்துள்ளார். மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின்போது அந்நூலை இவரே படித்தார் என்றும் கூறுவர்.

அரங்கநாதக் கவிராயர்

இவர் புதுவையைச் சேர்ந்தவர். நல்லாப்பிள்ளை பாரதத்தையும், பிரகலாதன் நாடகத்தையும் உரைநடையில் இயற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.