மு.இராமசாமிக் கவிராயர்
இவர் நெல்லையைச் சேர்ந்த சேற்றூரில் பிறந்தவர். முகவூர் கந்தசாமிக் கவிராயரின் மகன். இவருடைய பிள்ளைகளே மு.ரா.அருணாசலக் கவிராயர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா.கந்தசாமிக் கவிராயர்கள் ஆவர். இவர், பொம்மு நாயக்கர், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரைத் தேவர், ஊற்றுமலை ஜமீன் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர். நிறைய தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இவரும் இவருடைய மகன் சுப்பிரமணியக் கவிராயரும் சேற்றூர் ஜமீன் முத்துசாமித்துரை மீது குறவஞ்சி பாடியுள்ளனர்.
மு.ரா. அருணாசலக் கவிராயர்
இவர் சேற்றூர் அருகிலுள்ள முகவூரில் பிறந்தவர். மு.இராமசாமிக் கவிராயரின் மகன். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் உற்ற நண்பராக விளங்கியவர். சேறைத் தவம்பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ், சிவகாசித் தலபுராணம், பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத்தமிழ், ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணிக்கோவை, குற்றாலப்புராணம், வேணுவன புராணம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களுள் சிலவற்றை இயற்றியும், சிவவற்றை பதிப்பித்தும் உள்ளார்.
சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர்
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் இரண்டாவது மகன். நமச்சிவாய தேசிகரிடம் கல்வி பயின்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து குறிப்புரைகள் எழுதி பதிப்பித்தவர். இவர் தன் தந்தையுடன் இராயப்பட்டி ராயப்ப உடையாரை சந்திக்கச் சென்றபோது குதிரைக் குட்டியைப் பரிசாகப் பெற்றுள்ளார். இவர், மதுரை மீனாட்சியம்மை கொம்பைத் தமிழ் நூலையும் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.
மு.ரா.கந்தசாமிக் கவிராயர்
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றவர். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு பூண்டிருந்தவர். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர். திருப்பேரூர் திரிபந்தாதி, குமண சரித்திரம், பவ நிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ், கருமலையாண்டவர் துதி மஞ்சரி, அரிமழத் தலபுராணம், வியாசர் திரட்டு (இரண்டு பாகம்), தனி செய்யுள் சிந்தாமணி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்! திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பதிலடி!
தோல்வியே காணாத அணி: பாகிஸ்தானை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்தவில்லை? ரஜினிகாந்த் பதில்!

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



