

தலைமகனுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன.
அறிவு :
எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு.
நிறை :
காப்பன காத்து கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்.
ஓர்ப்பு :
ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல்.
கடைப்பிடி :
கொண்ட பொருள் மறவாமை.
தலைமகளுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன.
அச்சம் :
பெண்மையின் தான் காணப்படாததொரு பொருள் கண்டவிடத்து அஞ்சுவது.
மடம் :
கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
நாணம் :
பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை.
பயிர்ப்பு :
பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.