

உண்டி கொடுத்தோர்
பசியால் வாடும் மக்களின் பசியை நீக்குவோர், இந்த மேலான உலகில் உண்மையான வாழ்க்கை வாழ்பவராவர். மண் நிறைந்த இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோர், அவர் தமக்கு உயிர் கொடுத்தோரை ஒப்பர்.
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
(மணிமேகலை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.