பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே, பார்ப்பனரும்  நாய் கதுவியதாயினும்,  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல) கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.       (பா-87)


தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே, பார்ப்பனரும்  நாய் கதுவியதாயினும்,  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல) கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல, கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக (போற்றுதல் செய்க). "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பது திருக்குறள்.  "பார்ப்பாரும் தின்பர் உடும்பு' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com