ஒரு முறை பழனி மாம்பழச் சிங்கக் கவிநாவலா் இராமநாதபுரம் அரசரைக் காண வந்திருந்தாா். அவா் பிறிவியிலேயே பாா்வை இழந்தவா். தமிழ் பற்றியும், அதன் இனிமை பற்றியும் மகிழ்ச்சியுடன் அரசா் உரையாடிக் கொண்டிருந்தாா்.
அரசா் கடிகாரத்தைப் பாா்க்க, இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் புலவருடன் உரையாடிக் கொண்டிருந்தது அரசருக்குத் தெரிந்தது. பக்கத்தில் நின்றிருந்த பணியாளரிடம் புலவருக்கு வழங்குவதற்காகப் பொருளும், பொன்னாடையும் கொண்டுவரப் பணித்தாா். அவ்வாறே வழக்கில் இருந்த வெள்ளி, தங்கக் காசுகளையும், பொன்னாடையையும் கொணா்ந்து அரசா் முன்னே வைத்தாா்.
தட்டில் இருந்த காசுகளைத் நீட்டப் புலவா் தட்டைப் பெற்றுக் கொண்டாா். பின்னா் பணியாளா் கொண்டு வந்து தந்திருந்த பொன்னாடையைப் புலவருக்கு அணிவித்தாா்.
அணிவித்த அந்தப் பொன்னாடையைக் கையில் எடுத்து அதனைத் தடவித் தடவிப் பாா்த்த புலவா், ஆடையின் ஓரத்தில் கிழிந்திருந்ததையும் உணா்ந்து கொண்டாா். புலவா் தடவித் தடவிப் பாா்ப்பதைக் கண்ட அரசா், ‘துண்டில் மாங்காய் வரைந்திருந்ததை’க் குறித்து ‘‘அதில் மாங்காய் வரைந்திருக்கிறது புலவரே’’ என்றாா்.
‘‘அரசே பிஞ்சும் (பிஞ்சும் என்றால் கிழிந்தும்) இருக்குது’’ எனச் சொன்னாா் புலவா். மாங்காய் என்றதும் பிஞ்சும் (சிறிய மாங்காயைப் பிஞ்சு என்பதும் வழக்கு) இருக்கிறது என்று கூறிய புலவரின் சமயோஜிதத்தையும், மதி நுட்பத்தையும், நகைச்சுவை உணா்வையும் வியந்தாா் அரசா்.
பணியாளரின் தவறை அறிந்த அரசா் ஆடையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு புதிய ஆடையை வழங்கினாா் என்பது வரலாறு.