பெரியோர் வழுவார் 

 "வீடு அழிந்தவிடத்து' அதிலுள்ள மரங்கள், பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே, அறிஞர்கள் செல்வம்
 பெரியோர் வழுவார் 

பழமொழி நானூறு
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
 கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
 பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
 ஈடில் லதற்கில்லை பாடு. (பா-96)
 "வீடு அழிந்தவிடத்து' அதிலுள்ள மரங்கள், பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே, அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்), வலியில்லாததற்குப் பெருமையில்லை. (க-து) தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர். "ஈடில்லதற்குப் பாடில்லை' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com