உள்ளத்தில் மாண்பற்றார்
வெள்ளம்போல அளவிடற்கரிய மாண்புகள் உடைய உறவினர்கள் கூடியிருப்ப, அவ்விடத்தில் மனத்தின்கண் மாண்பில்லாத ஒருவர் இருந்தால்


பழமொழி நானூறு
வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி
மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்
பறைக்கண் கடிப்பிடு மாறு (பாடல்-180)
வெள்ளம்போல அளவிடற்கரிய மாண்புகள் உடைய உறவினர்கள் கூடியிருப்ப, அவ்விடத்தில் மனத்தின்கண் மாண்பில்லாத ஒருவர் இருந்தால், அவரை அறிந்து ஆராய்ந்து அவ்விடத்தை விட்டுப் பிரித்து விலக்கிவிட்டே, ரகசியத்தைப் பேச வேண்டும். அப்படி விலக்காதிருந்தால், அங்குப் பேசப்பட்டதெல்லாம் பறையினிடத்தே குறுந்தடியிட்டு அடித்து ஊர் முழுவதும் கேட்கச் செய்ததுபோல, செய்தி எங்கும் பரவியதாக ஆகிவிடும். "பறைக்கண் கடிப்பிடு மாறு' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...