அன்புள்ள ஆசிரியருக்கு

Updated on
1 min read


அருமையான கருத்துகள்
"சிறு பழத்து ஒரு விதையாய்...' என்ற வெற்றி வேற்கைப் பாடலை முதன்மையாகக் கொண்டு வரைந்த கிருங்கை சேதுபதியின் கட்டுரை அருமை. சைவ சமயக் குரவர்களின் பக்திப் பனுவல்கள் தொடங்கி, பல நூல்களை ஆய்வு செய்து, "நாய் பூனையான கதை'யில் நிறைவு செய்திருந்த கட்டுரை அருமையான கருத்துகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இரெ.இராமமூர்த்தி, சிதம்பரம்.

தமிழ்க்கனி
கிருங்கை சேதுபதியின் "சிறு பழத்து ஒரு விதையாய்...' கட்டுரை சிந்தைக்கு விருந்தாய் கிடைத்த ஒரு தமிழ்க்கனியாய் இனித்தது.
எஸ்.வஜ்ரவடிவேல், கோயம்புத்தூர்.

இதுவா மொழி ஆராய்ச்சி?
முனைவர் கா.காளிதாஸ் எழுதிய கட்டுரையில் "இலெமூரியா' என்ற சொல்லை இலை+முறியா என்று பிரித்து ஆராய்ச்சி செய்து விளக்கம் கூறியிருப்பது வீண் வேலை. "லெமூரியா' என்பது "லெமுரஸ்' என்ற இலத்தீன் சொல்லடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல். ஓர் ஆங்கிலச் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு ஆராய்வது மொழி ஆராய்ச்சி அல்ல.
கா.மு.சிதம்பரம், கோயம்புத்தூர்.

இலக்கியப் பரிசுகள்!
"சங்கீத பூஷணம் ப.முத்துக்குமாரசாமியின் நூல் குறித்த செய்திகள், நண்பர் மோகனுடனான கலாரசிகனின் இளமைக்கால உரையாடல்கள், மகாகவி பாரதி குறித்த நூல், கவிஞர் "பேரா'வின் கவிதை என அனைத்தும் கலாரசிகன், வாசகர்களுக்கு வழங்கிய இலக்கியப் பரிசுகள்!
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com