நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் பேணி
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு. (பாடல்-142 )
நாணத்தக்கனவற்றிற்கு நாணாராய் நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற, யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை, விரும்பி நடத்தி, அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல், புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடிவைத்ததோடு ஒக்கும். (க-து.) தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும். "புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.