பழமொழி நானூறு

நாணார் பரியார் நயனில செய்தொழுகும்பேணா அறிவிலா மாக்களைப் பேணி ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
பழமொழி நானூறு


நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் பேணி 
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு. (பாடல்-142 )


நாணத்தக்கனவற்றிற்கு நாணாராய் நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற, யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை, விரும்பி நடத்தி,  அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல்,  புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடிவைத்ததோடு ஒக்கும். (க-து.) தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.  "புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com