திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நெடுஞ்சாலையில் 15-ஆவது கி.மீ. தூரத்தில் கிளிநலூர் அல்லது கிளியனூர் (கிளியன்னவூர்) என மக்கள் அழைக்கும் ஊர் ஒன்றுள்ளது. திருக்கிளியன்னவூர் திருத்தலம் 276-ஆவது திருமுறைத்தலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சிவாலயம்) உள்ளது. சுவடி, ஏடுகளிலிருந்து அச்சு நூலாக தேவாரப் பதிப்புகள் பல வெளிவந்தபோதிலும், அவற்றில் இவ்வூருக்கென எந்தப் பதிகமும் இடம்பெறாமல் இருந்தது.
1930-ஆம் ஆண்டில் ஒரு சுவடியில் "கிளியன்னவூர் பதிகம்' என்ற பெயரில் இவ்வூருக்கென ஒரு பதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, அதை ஏட்டிலிருந்து பெயர்த்தெழுதி, 1932-இல் "சித்தாந்தம் மலர் 5, இதழ்-11-இல் பதிப்பித்து வெளியிட்டனர். இதன் பிறகே தொண்டை நாட்டுத் தேவாரத் திருத்தலங்கள் வரிசையில் 33-ஆவது பதியாக இவ்வூர் சேர்க்கப்பட்டது.
இந்த ஏட்டுச் சுவடி வாயிலாக தமிழ் மக்களுக்கு திருஞானசம்பந்தரின்( "தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் / சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்') மேலும் ஒரு பதிகம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் திருமுறையில் 127-ஆவது பதிகமாக இப்பதிகம் போற்றத்தக்கதாக ஆகிவிட்டது.
ஆனால், வெளிவந்துள்ள காசி மடம் பதிப்பு தேவாரப் பதிப்புகள் வரை, இக்கிளியன்னவூர் பதிகம் வெளிவர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. திருவிடைவாய் கல்வெட்டுப் பதிகம் மட்டும் காசி மடம் பதிப்பில் வெளிவந்தது போல், கிளியன்னவூர் கெளசிகப் பதிகமும் குடவாயில் பாலசுப்பிரமணியன் "தேவார மாண்பும் ஓதுவார் மரபும்' நூலில் பதிவாகியுள்ளதை இனி வெளிவரச் செய்து மகிழலாம்.
இப்பதிகத்தில் மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் இருவரும் பாண்டியன் நெடுமாறனுக்குத் திருஞானசம்பந்தர் மூலம் சுரம் (வெப்பு நோய்) போக்கிய செய்தி பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பதிவு செய்த குடவாயிலார் செயலை நன்றி பாராட்டி வணங்குவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


