புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவா துவப்பவே கொள்க
வரையக நாட! விரையிற் கருமம்
சிதையும் இடராய் விடும். (பாடல்-227)
மலையகங்கள் பலவற்றை உடைய நாடனே! மனத்து ஒருமைப்பாட்டுடனே கலந்து பழகியவரிடத்தும் ஒரு செயலைப் பற்றிச் சொல்வதானால், எடுத்துச் சொல்லும் மரபினின்று வழுவாமல், அவர் அதனால் உவப்பு உடையவராக அதனை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதையே மேற்கொள்க. அவசரப்பட்டால், காரியம் கெட்டுவிடும்; அதனால் துன்பமும் வரும். "விரையிற் கருமம் சிதையும் இடராய் விடும்' என்பது பழமொழி.