

நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ்சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர், அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர். (பாடல்: 296)
போரில் பகைவர் வென்றாலும் தாம் வென்றாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுதல்தான் நன்று. அவ்வாறு இன்றிக் கோட்டையை மூடிக்கொண்டு உள்ளிருந்து வீரம் பேசுவது பகை வயலுள் நீர்ப் பாய்ச்சியதற்கு ஒப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.