தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கம்பனின் தமிழமுதம் - 3: பொதிகையில் தமிழ்ச் சங்கம்

News image

கம்பர்

Updated On :28 ஜூலை 2024, 11:20 pm IST

வாலி கொல்லப்பட்டுவிட்டான். மழைக்காலமும் கடந்துவிட்டது. சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதே அடுத்த வேலை. கிட்கிந்தை அரசனான சுக்ரீவன், நான்கு திசைகளிலும் சென்று தேட வீரர்களைப் பிரித்து அனுப்பினான்.

கிழக்கு, மேற்கு, வடக்கு என்று மூன்று திசைகளுக்கும் தனித்தனி குழுக்களை அனுப்பிய சுக்ரீவன், தெற்கு திசைக்கு அனுமன், அங்கதன், சாம்பன் ஆகியோருடன் வேறு சில வீரர்களை அனுப்ப முடிவு செய்தான்.

சீதையை இராவணனே கொண்டு சென்றான் என்றும், அவன் தென்திசை நோக்கியே சென்றான் என்றும் குறிப்புகள் கிடைத்திருந்ததால், அனுமன் தலைமையில் பெரு வீரர்களை தெற்கு நோக்கி அனுப்பினான்.

செல்ல வேண்டிய வழிகள் என்னென்ன என்று அவன் சொல்லி அனுப்பியதாகத் தெளிவாக விளக்குகிறான் கம்பன். வடக்கில் இருந்து தெற்கு நோக்கிய பயணத்தில் இருக்கும் இடங்களை எல்லாம் துல்லியமாகக் கம்பன் சொல்வது வியப்பாகத்தான் இருக்கிறது.

"பல இடங்களைக் கடந்து வேங்கடத்தை அடைவீர்கள்' என்கிறான் சுக்ரீவன். இன்று திருப்பதி என்று அழைக்கப்படும் வேங்கடத்தைக் குறிக்கும் கம்பனின் கவிதை வரி இது;

"வட சொற்கும் தென் சொற்கும்

வரம்பு ஆகி'

"வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும் எல்லையாக இருக்கும் வேங்கடம்' என்று குறிப்பிடுகிறான் கம்பன். "வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' என்று தொல்காப்பியம் கூறுவதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

தொடர்ந்து வழிகளைக் கூறும் சுக்ரீவன், 'சோழ நாடு, மலை நாடு கடந்தால், தமிழ்நாட்டில் நுழைவீர்கள்'' என்கிறான்.

"பிறக்கம் உற்ற மலைநாடு நாடி,

அகன்

தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ'

என்பன கம்பன் வரிகள். "தமிழ்நாடு' என்று கம்பன் தெளிவாகப் பதிவு செய்யும் இடம் இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வரும் சுக்ரீவன், பொதிகை மலையைப் பற்றிக் குறிப்பிடும்போது, இப்படிச் சொன்னதாகக் கம்பன் எழுதுகிறான்:

"தென் தமிழ்நாட்டு அகன் பொதியில்

திரு முனிவன்

தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,

என்றும் அவன் உறைவிடமாம்;

ஆதலினால்

அம்மலையை இறைஞ்சி ஏகி...'

'தமிழ்நாட்டில், பொதிகை மலை உண்டு. அகத்திய முனிவர் தோற்றுவித்த தமிழ்ச்சங்கம் அங்கு இருக்கிறது. அகத்திய முனிவர் எப்போதும் வாழும் இடம் அது.

எனவே அந்த மலையை வணங்கிவிட்டு, அப்பால் செல்லுங்கள்!'' என்று கிட்கிந்தை மலையில் வாழ்ந்த சுக்ரீவன் சொன்னதாகக் காட்சி அமைக்கிறான் கம்பன்.

'பொதிகை மலைக்கு சீதையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. தமிழ்மொழி வாழும் அந்த மலையைத் தொழுது வணங்கிவிட்டு உங்கள் தேடுதலைத் தொடருங்கள்!'' என்று சுக்ரீனைச் சொல்ல வைத்து, தனது ஆழமான தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறான்

கம்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.