நல்வினைகளை தேடுவோம்!

ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று.
நல்வினைகளை தேடுவோம்!
Published on
Updated on
1 min read

ஆட்பார்த்து உழலும் அருளில்கூற்று உண்மையால்

தோட்கோப்புக் காலத்தாற் கொண்டு உய்மின்; பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாயலறக் கோடலான், மற்றதன்

கள்ளங் கடைப்பிடித்தல் நன்று.

(பாடல் 20 அதிகாரம்: இளமை நிலையாமை)

ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று. அது உண்மையாதலால், நல்வினையாகிய கட்டுச்சோற்று மூட்டையைத் தேடிக்கொள்ளும் காலத்தோடேயே தேடி வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள்.

கருப் பையிலே இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாயானவள் அலறித்துடிக்கப் பிள்ளையைக் கொண்டு போகின்றதனால், அந்தக் கூற்றத்தின் வஞ்சனையை மறவாமல், உறுதியாக அறிந்து தெளிவுகொள்ளுதலே மிகவும் நன்மையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com