தமிழ்மணி
மரணத்துக்கு தப்பியவர் யாருமில்லை!
மலையின் மேலாகத் தோன்றும் முழுநிலவினைப்போலத் தமது பட்டத்து யானையின் தலையின் மேலாக எடுத்துக் கொள்ளப்பட்ட வெண்கொற்றக் குடையினராக விளங்குபவர் பேரரசர்கள்.
'மலைமிசைத் தோன்றும் மதியம்போல்' யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர்,} நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
(பாடல் 21 அதிகாரம்: யாக்கை நிலையாமை)
மலையின் மேலாகத் தோன்றும் முழுநிலவினைப்போலத் தமது பட்டத்து யானையின் தலையின் மேலாக எடுத்துக் கொள்ளப்பட்ட வெண்கொற்றக் குடையினராக விளங்குபவர் பேரரசர்கள்.
அவர்களும் இந்த உலகத்திலே இறந்தவர்கள் என்று பலரும் அறியக் காட்டி இகழப் பட்டவர்களே யாவர். அஃதன்றி, அந்தச் சாவாகிய இகழ்ச்சிக்குத் தப்பினவரென்று எவருமே இவ்வுலகில் இதுவரை இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.