நிலையானவர் யாருமில்லை!

உங்களுடைய ஆயுள் நாட்களுக்குக் கணக்கிடுவதுபோல, ஒளி விளக்கமுடைய ஞாயிற்று மண்டிலம், உதித்தலில்லாத வீழ்நாள் ஏற்படாதபடி தவறாது உதயமாகின்றது.
நிலையானவர் யாருமில்லை!
Published on
Updated on
1 min read

வாழ்நாட்கு அலகா வயங்குஒளி மண்டிலம்

வீழ்நாட் படாஅது எழுதலால்,-வாழ்நாள்

உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரும்

நிலவார், நிலமிசை மேல்.

(பாடல் 22 அதிகாரம் : யாக்கை நிலையாமை)

உங்களுடைய ஆயுள் நாட்களுக்குக் கணக்கிடுவதுபோல, ஒளி விளக்கமுடைய ஞாயிற்று மண்டிலம், உதித்தலில்லாத வீழ்நாள் ஏற்படாதபடி தவறாது உதயமாகின்றது.

அதனால், வாழ்நாள் அழிந்து போவதற்கு முன்பாகவே உங்கள் கடமையான அறங்களைச் செய்து நல்வாழ்வுக்கு வழிதேடுங்கள். இந்த உலகத்தின்மேல், எத்தகையவரேயானாலும் நிலையாக நிலைபெற்றிருக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com