தீக்கூற்றம்!

ஏதாவது ஒரு பொருள் தம் கையில் கிடைக்கப் பெற்றால், இது நமக்குப் பின் காலத்திலே உதவுவது என்று அதனை இறுகப் பற்றிக் கொண்டிராமல், பிறருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள்
தீக்கூற்றம்!
Published on
Updated on
1 min read

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

பின்னாவது என்று பிடித்திரா- முன்னே

கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக்கூற்றம்

தொடுத்தாறு செல்லுஞ் சுரம்!

(பாடல் 5, அதிகாரம்: செல்வம் நிலையாமை)

ஏதாவது ஒரு பொருள் தம் கையில் கிடைக்கப் பெற்றால், இது நமக்குப் பின் காலத்திலே உதவுவது என்று அதனை இறுகப் பற்றிக் கொண்டிராமல், பிறருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள், வெம்மையான பாழ் நரகிலிருந்து தப்பிச் செல்வார்கள்; சுவர்க்கமும் அடைவார்கள். செய்யாத பிறரோ, அந்த வெம்மையிலேயே வீழ்ந்து தவிப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com