நிலையில்லா செல்வம்!

ஐயோ! அற்பத்தனமான எண்ணங்களை உடைய நெஞ்சமே! 'நாம் மென்மேலும் செல்வம் உடையவர்களாவோம்' என்று எண்ணி, அணுவளவும் நிலையில்லாத அந்தச் செல்வத்தை விரும்பினாய்.
நிலையில்லா செல்வம்!
Published on
Updated on
1 min read

'ஆமாம் நாம், ஆக்கம் நசைஇ; அறம் மறந்து,

போவோம் நாம்' என்னாப், புலைநெஞ்சே!-ஓவாது

நின்றுஞற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள்

சென்றன; செய்வது உரை.

(பாடல் 32 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)

ஐயோ! அற்பத்தனமான எண்ணங்களை உடைய நெஞ்சமே! 'நாம் மென்மேலும் செல்வம் உடையவர்களாவோம்' என்று எண்ணி, அணுவளவும் நிலையில்லாத அந்தச் செல்வத்தை விரும்பினாய். நாம் இறந்து போவோம் என்று எள்ளளவும் நினையாமற் போயினாய். சிறிது பொழுதும் ஓய்வில்லாமல், நிலையாக அந்தச் செல்வத்தைச் சம்பாதிக்கப் பலவாறெல்லாம் முயன்று நீ வாழ்வாய் என்றபோதும், நின் வாழ்நாட்கள் கழிந்து போயின. இனிச் செய்வதைச் சொல்வாயாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com