உயிர் போனபின் உணர்வற்ற உடல்

தோலாற் பொதிந்திருக்கின்ற உடலாகிய பையினுள்ளேயிருந்து, தான் செய்யவேண்டுமென விதிக்கப்பட்ட தொழில்களை முழுவதும் செய்து...
உயிர் போனபின் உணர்வற்ற உடல்
Published on
Updated on
1 min read

நார்த்தொடுத்து ஈர்க்கிலென்? நன்றாய்ந்து அடக்கிலென்?

பார்த்துழிப் பெய்யிலென்? பல்லோர் பறிக்கிலென்?

தோற்பையுள் நின்று, தொழிலறச் செய்தூட்டும்

கூத்தன் புறப்பட்டக் கால்.

(பாடல் 26 அதிகாரம்: யாக்கை நிலையாமை)

தோலாற் பொதிந்திருக்கின்ற உடலாகிய பையினுள்ளேயிருந்து, தான் செய்யவேண்டுமென விதிக்கப்பட்ட தொழில்களை முழுவதும் செய்து, தன் உடலை அனுபவிக்கச் செய்கின்ற கூத்தாடியாகிய உயிரானது, அந்த உடலைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டதென்றால், அதன் பின், அந்த உடலை நாரால் தொடுத்து இழுத்துச் சென்றால் என்ன? நன்றாக ஆராய்ந்து அடக்கஞ் செய்தால்தான் என்ன? கண்டவிடத்திலே போட்டால்தான் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com