சொல்லாமல் செல்வர்

மாந்தர்கள், 'யாம் வரட்டுமோ?' என்று கேளாமலேயே வந்து, உறவினர்களாக ஒரு வீட்டிலே பிறப்பார்கள்.
சொல்லாமல் செல்வர்
Published on
Updated on
1 min read

கேளாதே வந்து, கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புட்போல,

யாக்கை தமர்க்கொழிய நீத்து.

(பாடல் 30 அதிகாரம்: யாக்கை நிலையாமை)

மாந்தர்கள், 'யாம் வரட்டுமோ?' என்று கேளாமலேயே வந்து, உறவினர்களாக ஒரு வீட்டிலே பிறப்பார்கள். பின் 'போகிறோம்' என்று சொல்லாமலேயே தனக்கு இருப்பிடமாயிருந்த மரமானது தனித்துக் கிடக்கத் தொலை தூரத்திற்குப் பறந்து போகின்றதோர் பறவையைப் போலத், தம் உறவினர்களுக்கு தம் உடம்பை உயிரின்றித் தனித்து விட்டுவிட்டுத் தாமும் போய்விடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com