தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கயிலாயக் காட்சி காண...

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை உடையது திருவையாறு. தேவாரப் பாடல் பெற்றது. காவிரி வடகரைத் தலங்களில் 51 வது தலம். அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்ட அற்புதப் பதி. இத்திருத்தலத்த

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:51 am

எஸ். வெட்கட்ராமன்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை உடையது திருவையாறு. தேவாரப் பாடல் பெற்றது. காவிரி வடகரைத் தலங்களில் 51 வது தலம். அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்ட அற்புதப் பதி. இத்திருத்தலத்தில் தருமை ஆதீனத்துக்கு சொந்தமான

ஸ்ரீதர்ம ஸம்வர்த்தினி உடனாகிய ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 27.7.2009 அன்று திருப்பணி தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி, காலை 9 மணியளவில்  பஞ்சமூர்த்தி விமான பாலாலய ஸ்தாபன வைபவம் நடக்கிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெறும் முதல் கால யாக சாலை பூஜை வைபவங்களில் தருமை ஆதீனம் கலந்துகொள்கிறார். திருக்கயிலாய யாத்திரை செல்ல முடியாதவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலாயம் சென்ற பலன் கிடைக்கும் என்று கூறுவர். அவ்வகையில் பக்தர்களுக்கு கயிலாயத்தின் திருப்பணியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமைவிடம்: தஞ்சைக்கு வடக்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது திருவையாறு.

மேலும் தகவலுக்கு:  94431 50332.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.