குட்டையான சுயம்பு லிங்கமாகத் திகழ்கிறார் கொடுமுடிநாதர். லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களைக் காணலாம். அகத்தியர் இங்கே சிவபெருமானை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் இவை என்கின்றனர். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். மகுடேஸ்வரர், மலை கொளுந்தீஸ்வரர் என்றும், செüந்தரநாயகி, வடிவுடைநாயகி என்றும் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் திருநாமங்கள். சுயம்பு லிங்கமாக உள்ள மகுடேஸ்வரர் பாடகர்களுக்கு நல்ல குரல் வளத்தை அருள்கிறார் என்றும், அதற்கு கொடுமுடி கோகிலம் எனப்பட்ட சுந்தராம்பாள் ஓர் உதாரணம் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.