ஒரு முறை, ரிஷி குணசீலரின் குரு, குணசீலரைத் தன்னுடன் இருக்குமாறு அழைத்தார். அவருக்கு மிகுந்த மனக்குழப்பம். தவமிருந்து பெற்ற பெருமாளை விட்டுவிட்டுச் செல்வதா அல்லது குருவின் கட்டளையை மறுப்பதா? இப்படிப்பட்ட மனக் குழப்ப நிலையில், குருவுடன் இருக்குமாறு பெருமாள் ஒரு மருந்தைச் சொன்னார். அதன் பேரில் அவர் குருவிடம் செல்லும்போது, தன் சீடன் ஒருவனிடம் பெருமாளை ஒப்படைத்து, தினமும் பூஜை செய்துவரக் கட்டளையிட்டார். சீடனும் அதைக் கருத்தில் ஏற்று செய்துவந்தான். காவிரி பாயும் அந்த வனப்பகுதியில், நெடுகிலும் காடாக இருக்க, காவிரிக் கரையில் குணசீலம் இருந்தது. ஒரு முறை வன விலங்குகள் ஆசிரமத்தைச் சூழ்ந்து கொள்ளவே, அவற்றால் மிகவும் அச்சமுற்ற சீடன், உயிருக்குப் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடினான். பின்னர் ஆசிரமம் கேட்பாரற்றுப் போனது. நாளடைவில் ஆசிரமத்தில் புதர் மண்டி, விக்ரஹத்தை புற்று மண் மூடியது.