பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது இந்த சிவாலயம். தூண்களுடன் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் என்று அழகுற அமைந்துள்ளது. ""மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது'' என்ற சொல்லிற்கு ஏற்ப மூலவ மூர்த்தியான லிங்கமும், அம்பாளும் உருவங்களில் மிகச் சிறியதாய் காணப்பட்டாலும் பேரருளுடன் திகழ்கிறார்கள். சுவாமியின் மீது தினமும் சூரிய கிரணங்கள் பட்டு வழிபாடு செய்யும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு துர்க்கையும், நந்திகேஸ்வரரும் ஆலயத்தில் வெளிப்புறமாகக் காட்சி தருகிறார்கள்.