பிரம்மனுக்கு அருளிய நாதர்!
முக்தி தரும் தலங்களில் முக்கியமானது காஞ்சி மாநகர். இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது தியாமுகச்சேரி.


முக்தி தரும் தலங்களில் முக்கியமானது காஞ்சி மாநகர். இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது தியாமுகச்சேரி. தற்போது மருவி சேரிஐய்யம்பேட்டை என்று அழைக்கப்படும் இக்கிராமத்தில் உள்ளது பழைமையான கோதண்டராமஸ்வாமி திருக்கோயில். பிரம்மதேவனுக்கு திருமால் பரமபதநாதனாக காட்சியளித்த தலம் இது.
இத்திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகணகவல்லி சமேத ஸ்ரீபரமபதநாதஸ்வாமியும், ஸ்ரீசீதா லட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீகோதண்டராம ஸ்வாமியும் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்திற்கு வெளியே சிறிய திருவடிக்கு தனி சந்நிதி உள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த மகாசம்ப்ரோக்ஷணத்திற்கு பிறகு ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவலூரின் அபிமானத் தலமாக விளங்குகிறது. பரமபதநாதர் அழகிய கோலத்தில் அருள்கிறார். பிரதான தெய்வமாக பரமபதநாதர் இங்கு சந்நிதி கொண்டிருந்தாலும் அரசாங்க பதிவேடுகளில் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்ஸவம் வருகிற 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. காவேரிப்பாக்கம் அழகிய ராமர் கோயிலிலிருந்து பட்டாச்சார்ய பெருமக்கள் இந்த வைபவத்தை நடத்திக் கொடுக்கிறார்கள். தியாமுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பர்கள் இதனை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.
தகவலுக்கு: 91760 72181
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...