தனது தங்கையான தேவகிக்கும் வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று அசரீரி கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகியைக் கொல்ல முயன்றான். அப்போது தடுத்த வசுதேவர் தனக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதன்படி சிறையில் அடைத்து அவர்களைக் கண்காணித்தான் கம்சன். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாகக் கருவுற்றதும், திருமால், மாயா தேவியைப் படைத்து, "தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபன் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாகு' என்றார்.