ராஜப்பெருமாள் சர்வாலங்காரங்களுடன் சேவை சாதித்து, அதிகாலை 3 மணிக்கு திருக்கண்ண புரத்தை விட்டு புறப்பட்டு 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குடிச்சேரியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள, அவ்வமயம் திருமருகலிலிருந்து வரதராஜப்பெருமாளும் இணைந்துகொள்ள, மதியம் 12 மணியளவில் புறப்பட்டு புதுவை மாநிலத்தில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் உள்ள வெள்ளை மண்டபத்தில் தங்குகிறார். மாலை பவழக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தில் திருமலைராயன்பட்டினம், பட்டிணச்சேரி கடற்கரையில் எழுந்தருளியவுடன், அருகில் உள்ள 8 திருத்தலங்களில் உள்ள பெருமாளின் உற்சவமூர்த்திகளும் இணைந்து கொள்ள, சூரிய அஸ்தமனத்திற்கு முன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக் காட்சியைக் காண பல்லாயிரம் மக்கள் கூடுவர். பின்னர், மீனவ சமுதாயத்தினர் தங்கள் மாப்பிள்ளைக்கு பிரியாவிடை அளிக்க, திருக்கண்ணபுரம் திரும்புவார் பெருமாள்.