விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

சித்திரகுப்தர் கோயில்

சித்திரகுப்தன் பிறந்த தினமே சித்ரா பெளர்ணமி என்று கருடபுராணம், யம சம்ஹிதா, பத்மபுராணம் விஞ்ஞான தந்திரம் போன்ற புராண நூல்கள் கூறுகின்றன.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 2:45 pm

சித்திரகுப்தன் பிறந்த தினமே சித்ரா பெளர்ணமி என்று கருடபுராணம், யம சம்ஹிதா, பத்மபுராணம் விஞ்ஞான தந்திரம் போன்ற புராண நூல்கள் கூறுகின்றன.

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம்  செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் உபாயமாக உள்ளவரே சித்திரகுப்தன்.

இறைவனின் காயம் எனும் உடலில் இருந்து பிறந்ததால் இவர் காயஸ்தா என்றும்  அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் இவர் இறைவன்  குடி கொண்டுள்ள நம் காயத்தில் தான் குடி கொண்டுள்ளார். எனவே இதை நம் கருத்தில் ஊன்றி நாம் செய்யும் பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை அதிகரித்து இறைவன் அருளால் இருவினையும் நீங்கப் பெற்று முக்தியடைய முயல வேண்டும்.

சித்தர்கள் இச்செயலை அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம் என வரையறுக்கின்றனர்.

"கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்திடை நின்றானேட'

எனத் திருமூலர் இறைவனை அடையக் கூடிய ஒரு மெய்யடியாரின் குணாம்சங்களை வரையறுக்கின்றார்.

திருவடி பீடத்திற்கு வரும் ஒவ்வொரு மெய்யடியாரும் இறைவனை அடைய தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.   கருவறையில் ஒவ்வொருவரும் தங்கள் திருக்கரங்களால் தாங்களே பூஜை செய்து, தங்கள் பாவங்களைப் போக்கும் நிவாரணத்தை எல்லாம் வல்ல இறைவன் அருளால் நம்முள் உணர்ந்து சாப, பாவ நிவர்த்தி பெற்று நல்வழியில் நன்முயற்சியுடன் இறைவனை அடையலாம்.

சித்திரகுப்தன் கேது பகவானுக்கு அதிபதியாக உள்ளார். அந்த கேது நம்முள் எவ்வடிவில் உள்ளார் என்பதை  தத்துவார்த்தமாய் விளக்கும் திருத்தலமே திருவடி பீடம்.

மனிதனின் பாவங்களின் மூலகர்த்தா  நோய் அந்த நோய் தீர்க்கும் அற்புத மருந்தை சித்தர்கள் கூறிய சித்த வைத்தியம் மூலம் ,திருவடி லோகம் முழுவதும் யாரிடமும் காணிக்கை அல்லது காசு வாங்காமல் நோய்க்கு மருந்து கொடுத்து பெற்ற உபாயத்தால் உருவானதே நம் திருவடி லோகம் முழுவதும். எண்ணிலா அடியார்கள் நோய் தீர்க்க உபாயம் செய்த மருந்துகள் அரைத்த கல்வம் தான் இன்று திருவடி பீடமாக அமைந்துள்ளது. எண்ணிலா அடியார்கள் பாவம் தீர்த்த அந்த திருவடி பீடத்தை வணங்குவதால் நம் பாவம் தீரும் உபாயம் நிச்சயம் நமக்கு கிட்டும்.

இறைவன் அருளால் நம் பாவங்கள் தீரும் உபாயம் அறிய திருவடி பீடம் வாரீர். திருவடி பீட பூஜையில் கலந்து கொண்டு இறையருள் பெறுவீர். 
அமைவிடம்: திருவடி லோகம், கண்டியங்கோவில், திருப்பூர்-641665. 

தொடர்புக்கு: 90807 55533.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.