திருமண பந்தம் என்பது இரு இருதயங்கள் இணைகிற ஓர் உன்னதமான உறவு. அதில் குறுக்கும் நெடுக்குமாய் மதிகெட்ட மனிதர்களால் கிழிக்கப்படுகிற கோணல் கோடுகள் மானுடத்தின் வசந்த வாழ்வினைப் பாழாக்கிவிடுகிறது என்பதை தேவமைந்தன் இயேசு தீர்க்கமாய்ப் பேசினார்.
மோசேயின் சட்டத்தை ஒட்டி ஒழுகுவதாய் பெருமை பேசியவர்கள் யூதர்கள். அச்சட்டம் "இல்லற வாழ்க்கையில் இருக்கிற ஆண் ஒருவர், மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு தன் மனைவியை விலக்கிவிடலாம்' என்று பேசியது. ஆனால் இயேசு அச்சட்டத்தின் ஆணாதிக்க அச்சாணியை முறிக்கவே முயன்றார்.
ஒருமுறை, யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயா பகுதிக்கு இயேசு சென்றபோது அவரைப் பரிசோதிக்கும் நோக்கில் பரிசேயர் அவரிடம் "ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?' எனக்கேட்டார்.
இயேசு எதிர்வினையாக "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்பதை நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா? இதனால் கணவன், தன் தாய் தந்தையை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள்(கணவன்-மனைவி) இருவர் அல்லர். ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்' என்றார் (மத். 19:2-6).
இயேசுவிடம் பேசிய பரிசேயர் "அப்படியானால் மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?' என்றார்.
அங்கேதான் அச்சமூகத்தின் ஆழ்மன ஊனம் வெளிப்பட்டது. பெருமைக்குரிய பெண்மையை கொச்சைப்படுத்தும் அர்த்தமற்ற மணமுறிவினை நியாயப்படுத்தும் வெறுப்பும், வெஞ்சினமும் வெளிப்பட்டது.
அதனை அவர்களுக்கு உணர்த்தும் விதமாகவே "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கம் முதல் அவ்வாறு இல்லை' என்றார் இயேசு.
இன்னமும் ஒருபடி மேலாக அவர் "நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் பரத்தமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் மனைவியை விலக்கிவிடக்கூடாது' என்றார் (மத். 5:32). இருபாலருக்கும் பொதுவான இல்லற ஒழுக்கத்தை இறைமகன் தெளிவாக இங்கே மொழிகிறார்!
திருமணம் என்பது நறுமணம் வீசும் சொந்தங்கள் மலர்கின்ற சோலை. உறவுகள் உருவாகும் அழகான நந்தவனம். நட்பிற்கும் மேலான கணவன் மனைவி உறவில், பிரிவு என்னும் நூலிழை விரிசலும் நுழையக்கூடாது என்பதே இயேசுவின் வேதமாகும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை!

ஓடிடியில் கவனிக்கப்படாத சாய் அபயங்கரின் முதல் திரைப்படம்!

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க 90% வாய்ப்பில்லை! டிரம்ப் பரபரப்பு தகவல்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK


