நிகழ்வுகள்

கோப்புப்படம்

கோப்புப்படம்
கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் செம்பியவேளூர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ செண்பகவள்ளித் தயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மார்ச் 23, புதன்கிழமை நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் மார்ச் 21 ஆரம்பமாகிறது.
தொடர்புக்கு: 9444172918 / 9786156465.
காகபுஜண்டர் பூஜை
சித்தருக்கெல்லாம் மஹா சித்தர் காகபுஜண்டர் ஆவார். பதினென் சித்தருக்கு மூத்தவர். இவருக்கு அமைந்த வழிபாட்டு தலங்களில், திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோயில் கிராமத்தில் உள்ள சித்தர் திருவடி பீடமும் ஒன்று. இப்பீட வளாகத்தில் காகபுஜண்டர் பகுளாதேவி தம்பதிகளுக்கு பதினெண் சித்த புருஷர்களுடன் விக்ரகங்கள் பிரதிஷ்டையாகியுள்ளன. இதைத் தவிர பிரகாரச்சுற்றில் தனி சந்நிதியாக (குடவறைச்சிற்பம்) ஓலைச் சுவடியுடன் காகபுஜண்ட மகரிஷி காட்சி தருகின்றார். இந்த சந்நிதியில் மார்ச் 18 வெள்ளிக்கிழமையன்று பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்கலாம்.
தொடர்புக்கு: சித்தர்தாஸன், 9488031433.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...