நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் வழக்கின் மறுவிசாரணை தொடக்கம்

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 மே 2013, 3:52 am IST

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை சனிக்கிழமை தொடங்கியது.

எகிப்து அதிபராக இருந்த முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து 2011இல் அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கியது. இதில் 850 பேர் வரை உயிரிழந்தனர்.

பின்னர் எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முபாரக் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கிய வழக்கில் முபாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்தும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரியும் முபாரக், கெய்ரோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதன்படி, மறுவிசாரணை கடந்த மாதமே தொடங்கியிருக்க வேண்டும். எனினும், இவ்வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி முஸ்தபா ஹசன் அப்துல்லா அதை கெய்ரோ மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மாற்றினார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை, நீதிபதி மஹ்மூத் கமேல் எல்-ரஷீதி முன்னிலையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த விசாரணைக்காக, உடல்நலம் குன்றியுள்ள முபாரக் ஸ்டிரெட்சரில் படுத்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முபாரக்கின் இரு மகன்களான கமாலா, ஆலா ஆகியோரும், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல்-அட்லி, ஆறு உதவியாளர்கள் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.