எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை சனிக்கிழமை தொடங்கியது.
எகிப்து அதிபராக இருந்த முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து 2011இல் அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கியது. இதில் 850 பேர் வரை உயிரிழந்தனர்.
பின்னர் எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முபாரக் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கிய வழக்கில் முபாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்தும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரியும் முபாரக், கெய்ரோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதன்படி, மறுவிசாரணை கடந்த மாதமே தொடங்கியிருக்க வேண்டும். எனினும், இவ்வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி முஸ்தபா ஹசன் அப்துல்லா அதை கெய்ரோ மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மாற்றினார்.
இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை, நீதிபதி மஹ்மூத் கமேல் எல்-ரஷீதி முன்னிலையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த விசாரணைக்காக, உடல்நலம் குன்றியுள்ள முபாரக் ஸ்டிரெட்சரில் படுத்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முபாரக்கின் இரு மகன்களான கமாலா, ஆலா ஆகியோரும், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல்-அட்லி, ஆறு உதவியாளர்கள் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...







