உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
எனினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதிபர் ஜேக்கப் ஜுமா வெளியிட்டுள்ள அறிக்கையில், ""முன்னாள் அதிபர் மண்டேலா, அவர் சிகிச்சை பெற்றுவரும் பிரிடோரியா மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.
பிரிடோரியா மருத்துவமனையில் அளிக்கப்பட்டதைப் போலவே, அவரது இல்லத்திலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் அவரை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










