சீனாவில் ஏழு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 6 பேர் பலி

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
சீனாவில் ஏழு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 6 பேர் பலி
Updated on
1 min read

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

லியோனிங் மாகாணத்தில் உள்ள 7 அடுக்குமாடி கட்டிடத்தில் அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக சிங்குவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. தீ மற்ற கட்டிடத்துக்கு பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com