ராஜ்நாத்தின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து பேரணி: ஹிஸ்ப் -உல்-முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தின் பாகிஸ்தான பயணத்தை எதிரத்து, இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
ராஜ்நாத்தின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து பேரணி: ஹிஸ்ப் -உல்-முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பங்கேற்பு
Updated on
1 min read

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தின் பாகிஸ்தான பயணத்தை எதிரத்து, இஸ்லாமாபாத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகையை எதிர்த்து இஸ்லாமாபாத்த்கில் இன்று மாபெரும் பேரணியொன்று நடைபெற்றது. இந்த பேரணியில் 2000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக கோஷ ங்கள் எழுப்பினர்.

பாகிஸ்தானில் உள்ள சமூக, மத மற்றும் அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்த அமைப்பான 'அனைத்து கட்சி ஹுரியத் கான்பெரன்ஸ்' என்ற அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
 

இந்த பேரணியில் அமைப்பின் ஹிஸ்ப் -உல்-முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சலாஹுதீன் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com