எரிவாயு பலூன் வெடித்து 16 பேர் பலி : அமெரிக்காவில் நடந்த சோகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எரிவாயு பலூன் வெடித்து சிதறிய விபத்தில் 16 பேர் பலியானார்கள்
எரிவாயு பலூன் வெடித்து 16 பேர் பலி : அமெரிக்காவில் நடந்த சோகம்
Updated on
1 min read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எரிவாயு பலூன் வெடித்து சிதறிய விபத்தில் 16 பேர் பலியானார்கள்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியில் இருந்து  சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது  லோக்கார்ட் பிரதேசம் . இங்குதான் எரிவாயு பலூன் வெடித்து சிதறிய விபத்து நிகழ்ந்துள்ளது.  இச்சம்பவத்தில் பலூனில் இருந்த 16 பேரும் உயிரிழந்தனர்.

வெடிப்பிற்கான  காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருந்த போதிலும்  பலூன் அவசரமாக தரையிறங்கியபோது அவ்வழியாக செல்லும் மின்கம்பின் மீது உரசி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கோர விபத்து தொடர்பாக  அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது: இரண்டு முறை வெடிப்பு சத்தம் கேட்டது, பின்னர் அப்பகுதியில் உயரத்தில் தீக்கோளம் போன்று காட்சி அளித்ததை பார்த்தேன் என்று தெரிவித்தார்.  

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com