ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்து மீது லாரி மோதி விபத்து: கென்யாவில் 30 பேர் பலி! 

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஞாயிறு காலை பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்

News image
Updated On :31 டிசம்பர் 2017, 8:56 am

DIN

நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஞாயிறு காலை பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்

கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பசியா பிரதேசத்தில் இருந்து ஞாயிறு அதிகாலை, பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் நகுரு பகுதியில் இருந்து எதிர் திசையில் வந்த லாரி ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். மரணமடைந்தவர்களில் 3 வயது குழைந்து ஒன்றும் அடங்கும். காயமடைந்தவர்கள் அனைவரும்  உடனடியாக நகுரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.