அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஈராக்கில் தீவிரவாதிகள்  தொடர் தாக்குதல்: 60 பேர் பலி! 

ஈராக்கில் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 60 பேர் பலியாகினர்.

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 1:28 pm

DIN

பாக்தாத்: ஈராக்கில் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 60 பேர் பலியாகினர்.

இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

ஈராக்கின் தென்பகுதியில் அமைந்துள்ள நசிரியாஹ் பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

பின்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேறியவர்கள் அருகில் இருந்த சோதனைச் சாவடி ஒன்றில் தங்கள் காரிலிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர்.

தீவிரவாதிகளின் இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களின் காரணமாக 60 பேர் பலியாகினர். மேலும் பலர் படு காயமடைந்தனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது இந்த சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.