ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதற்கு பயந்த காலம் மலையேறி தற்போது பல ஆஃபர்களை அள்ளிக் குவிக்கும் ஆன்லைன் விர்த்தகம் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுக்க மக்கள் நேரமின்மை காரணமாகவும், பணத்தை மிச்சப்படுத்தவும் ஆன்லைன் வர்த்தகத்தை நாடுகின்றனர். பசிக்கு பீட்சா ஆர்டர் செய்வதிலிருந்து, செல்ஃபோன் வரை, ஆடை அணிகலன்களிலிருந்து டூத் பேஸ்ட் வரை சர்வமும் இணையத்தில் கிடைக்கும் டிஜிட்டல் உலகமிது. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஜெயண்ட் என்று சொல்லப்படும் பலமிக்க நிறுவனங்களுள், கூகுள் ஆல்ஃபபெட், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈபே, அலிபாபா, ஊபர், ஃபேஸ்புக், ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் (Amazon Inc), ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை பதிக்க சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஸ் பெஸோஸ் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ப்ளிப்கார்ட்டை சக போட்டியாளரான அமேசான் (Amazon Inc) நிறுவனம் வாங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம் இந்தியாவில் அமேசானுக்குப் போட்டியாக இருப்பது ப்ளிப்கார்ட் நிறுவனம்தான்.
சீனாவை தவிர பெரும்பாலான இடங்களில் தங்கள் கிளையை தொடங்கி உள்ள அமேசான், உலகம் முழுக்க இணைய வர்த்தகத்தில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவிலுள்ள ப்ளிப்கார்ட் மற்றும் சீனாவின் அலிபாபா ஆகிய நிறுவனங்கள் இணையத்தில் மிகப் பிரபலமாக உள்ளதால், அமேசானால் இந்தியாவிலும் சீனாவிலும் மற்ற இடங்களைப் போல முதன்மையாக இருக்க இயலவில்லை. ப்ளிப்கார்ட்டை வாங்குவதினால் இந்த போட்டியை வென்றெடுக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ப்ளிப்கார்டின் இலக்கு இந்திய வர்த்தகம் மட்டுமே. இதன் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்ஸால் ஆகியோர். 2007-ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், அமேசானுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்ததன் காரணம் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் பொருட்கள் ஒவ்வொறு ரகமும் அமேசானில் கிடைக்கக் கூடியவை. மேலும் சலுகை விலை அறிவிப்பிலும், குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் ப்ளிப்கார்ட் அமேசானுக்கு இணையாக செயல்பட்டு தனி முத்திரை பதித்து வருகிறது. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ப்ளிப்கார்ட் இருந்து வருவதும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 60 சதவிகிதத்திற்கும் மேலான பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தை முடக்க அமேசான் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கு முன்னால் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்க முடிவு செய்து, அதன் 40 சதவிகித பங்குகளை தங்களுக்கு விற்குமாறு ப்ளிப்கார்ட்டிடம் கேட்டுள்ளது. போலவே அமேசானும் தற்போது களமிறங்கி இருப்பதால், இணைய வர்த்தக உலகில் இச்செய்தி பரபரப்பாகியுள்ளது.
அமேசானுக்கும் வால்மார்ட்டுக்கும் ஒப்புக் கொடுத்துவிட்டு ப்ளப்கார்ட் கடையை சாத்துகிறதா அல்லது போட்டிகளை சமாளித்து தனித்துவத்துடன் இணைய வர்த்தகத்தில் எல்லைகளை விரிவுபடுத்தப் போகிறதா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


