இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாகிஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:25 pm

DIN

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள புனெர் நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கோஹத் மாவட்டத்தின்  சமரி பகுதி அருகே வந்தபொழுது, லாரி ஒன்றின் மீது நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பேர் பெண்கள்.  2 பேர் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகினர். மேலும் 35 பயணிகள் படுகாயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.