வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராகாப் பணியாற்றி வரும் ஜேம்ஸ் மேட்டீஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது. அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்களை வீழ்த்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு சென்றன. தீவிரவாதிகள் வசமிருந்த பல நகரங்களை அமெரிக்க கூட்டுப் படைகள் மீட்டுள்ளன.
இந்த சூழலில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக கூறி, அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். இது கலவையான எதிர்வினைகளை எழுப்பியது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராகாப் பணியாற்றி வரும் ஜேம்ஸ் மேட்டீஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது முக்கியமான சம்பவமாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா முடிவினை அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


