
டோக்கியோ: ஜப்பானின் ஹோன்சூ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
ஜப்பானின் ஹொன்சூ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹொன்சூ தீவு பகுதியில் உள்ள நகர பகுதிகளில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, அந்நகர குடியிருப்பு வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயந்து ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தில் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமியில் 222 பேர் இறந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.